×

சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்பு..!!

சென்னை: சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின்படி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பரங்கிமலை பட்ரோட்டில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.2.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டது. சென்னை புறநகரில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்கப்படாமல் உள்ள அரசு நிலத்தை மீட்கும் பணி தொடரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Parangimalai, Chennai ,Chennai ,Parangimalai ,Chengalpattu ,Collector ,Arunraj ,Pallavaram Tahsildar Arumugam ,
× RELATED சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய்...