- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன்
- முத்துபேட்டை
- முத்துப்பேட்டை தாசில்தார்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- மேட்டூர்
- சுப்பிரமணியன்
முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கருகும் பயிரை காப்பாற்ற மேட்டூர் அனையிலிருந்து பிப்ரவரி வரை பாசன நீரை திறந்து விட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சந்திர சேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு நகர செயலாளர் மார்க்ஸ், விவசாய சங்க ஒன்றிய துணைச்செயலாளர் ரகுபதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், ஏஐஒய்எப் ஒன்றிய செயலாளர் ஆகியோர் கோரிக்கைளை விளக்கி பேசினார்கள். இதில் கலந்துக்கொண்ட விவசாயிகள் கோரிக்கைளை குறித்து கோசங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
The post முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.