×

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு

ஜெயங்கொண்டம்: மகாத்மா காந்தி நினைவு நாளான நேற்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவேல் தலைமையில் காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவை நேற்று அனுசரிக்கும் விதமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன், விவசாய சங்க சத்தியமூர்த்தி, சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் முகமது ரஷீத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு காந்தி சிலை முன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 

The post தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : People's Unity Platform of Tamil Nadu ,Jayangondam ,Mahatma Gandhi Memorial Day ,Jayangondam Gandhi Park ,Tamil Nadu People's Unity Stage ,Tamil Nadu People's Unity Platform ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் சாலையோர புளிய மரத்தில் திடீர் தீ