×

சிறுவனை பாலியல் துன்புறுத்திய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

தேனி, ஜன. 31: தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுவனை பாலியல் துண்புறுத்தல் செய்து அடித்துக் காயப்படுத்திய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி கோர்ட் தீர்ப்பளித்தது. கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இவர் 15 வயது சிறுவனை கடந்த 2019ம் ஆண்டு செப்.20ம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதற்கு சிறுவன் மறுக்கவே, ஆத்திரத்தில் சிறுவனை அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தினார்.

இதுகுறித்து சிறுவன் அளித்த புகாரின்பேரில் கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ மற்றும் அடித்துக்காயப்படுத்திய பிரிவுகளின் கீழ் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல்தவமணிசெல்வி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நீதிபதி கணேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், குற்றவாளிக்கு போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறதை் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அடித்துக்காயப்படுத்திய குற்றத்திற்காக 1 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபாரதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 1 ஆண்டுகள் 1 மாத காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், சிறைத்தண்டனையை பொறுத்தவரை இருபிரிவுகளையும் சேர்த்து 20 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

The post சிறுவனை பாலியல் துன்புறுத்திய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni district ,Kambam ,
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...