×

விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

 

மதுரை, ஜன.31: இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை கமிஷனர் மதுபாலன் தலைமையில் நேற்று பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் உதவி கமிஷனர் முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். துணை மேயர் நாகராஜன், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் (கணக்கு) விசாலாட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

The post விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,India ,Madurai Municipal Corporation Scholar Anna House ,Commissioner ,Madhubalan ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை