×

திண்டுக்கல் அருகே டூவீலர் விபத்தில் கல்லூரி மாணவர், மெக்கானிக் பலி

திண்டுக்கல், ஜன. 31: திண்டுக்கல் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர், மெக்கானிக் உயிரிழந்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (24). மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் கவுசிக் பாலாஜி (23). இவர் திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நேற்று காலை டூவீலரில் திண்டுக்கல்- திருச்சி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர்களது டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் டூவீலரிலிருந்து தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். இதில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் கவுசிக் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கவுசிக் பாலாஜியும் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்ஐ அருண் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே டூவீலர் விபத்தில் கல்லூரி மாணவர், மெக்கானிக் பலி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Chandrasekhar ,Sengurichchi ,Kaushik Balaji ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...