×

இருதரப்பு மோதலில் பால் வேன் கண்ணாடி உடைப்பு, பைக் சேதம் 4 வாலிபர்கள் கைது செங்கம் அருகே வாகனம் வேகமாக ஓட்டியதாக

செங்கம்: செங்கம் அருகே வாகனம் வேகமாக ஓட்டியதாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பால் வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், பைக்கும் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் புதுப்பாளையம் காவல் பகுதிக்கு உட்பட்ட மேல் குப்பம் கிராமத்தில், கீழ்குப்பத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக ஓட்டுவதாக கூறி கடந்த 28ம் தேதி ஒரு பிரிவினர் ஒரு பால் வேனை மடக்கி தகராறு செய்து அதன் டிரைவரை தாக்கி வேனின் முன்பக்க கண்ணாடியும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் மற்றொரு பிரிவினர் இதை எதிர்த்து கேட்க வரும்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் மற்றொரு தரப்பினரின் பைக் சேதமடைந்தது. இதனால் பதற்றம் நிலவியது.

The post இருதரப்பு மோதலில் பால் வேன் கண்ணாடி உடைப்பு, பைக் சேதம் 4 வாலிபர்கள் கைது செங்கம் அருகே வாகனம் வேகமாக ஓட்டியதாக appeared first on Dinakaran.

Tags : Sengam ,Thiruvannamalai district ,Sengam circle ,Pudupalayam ,Dinakaran ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி