×

அதிக கல் பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எட்டயபுரம் தாலுகாவை பாஜ முற்றுகை

எட்டயபுரம்: அதிகளவிலான கல் பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கல் குவாரியில் இருந்து நாவலக்கம்பட்டி, வீரப்பட்டி, சின்னமலைக்குன்று, குமரெட்டியாபுரம் வழியாக கல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்கின்றன. அதிக பாரத்துடன் செல்லும் டாரஸ் லாரிகளால் கிராம சாலைகள் சேதமடைந்து வருகின்றன. மேலும் அதிவேகமாக செல்வதால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் குவாரி அனுமதிச்சீட்டை மீனாட்சிபுரம் குவாரியில் இருந்து செல்லும் லாரிகளில் முறைகேடாக பயன்படுத்துவதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் பாஜ குற்றம்சாட்டி உள்ளது.

The post அதிக கல் பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எட்டயபுரம் தாலுகாவை பாஜ முற்றுகை appeared first on Dinakaran.

Tags : BJP ,Ettayapuram ,Meenakshipuram ,Navalakampatti ,Veerapatti ,Chinnamalaikunnu ,Kumarettiapuram ,Baja ,taluk ,
× RELATED எட்டயபுரம் அருகே நீர்வரத்து ஓடை,...