- முதல் அமைச்சர்
- ஸ்பெயினில் முதலீட்டாளர்
- கே. ஸ்டாலின்
- ஸ்பெயின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஸ்பெயினில் முதலீட்டாளர்களின் மா
- ரோக்கா
- எடிபன்
- சீ
- முதலீட்டாளர் மாநாடு
- மு. கே. ஸ்டாலின்
- தின மலர்
ஸ்பெயின்: ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்த நிலையில் இன்று (ஜன.30) முதலீட்டாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். ROCA, Edibon, CIE நிறுவன முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகருக்கு சென்றுள்ளார்.
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
இந்தநிலையில் ஸ்பெயினில் முதலீட்டாளர்களை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ROCA, Edibon, CIE ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்த நிலையில் இன்று முதலீட்டாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.