×

சென்னையில் தங்கத்தின் விலை 2வது நாளாக உயர்வு: சவரன் ரூ.46,880-க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏற்றம், இறக்கத்தோடு காணப்பட்டு வருகிறது. சில சமயத்தில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. அதன்படி சென்னையில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று கணிசமாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதாவது சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 அதிகரித்து ரூ.5,860-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று கலக்கமடைய செய்துள்ளது.

The post சென்னையில் தங்கத்தின் விலை 2வது நாளாக உயர்வு: சவரன் ரூ.46,880-க்கு விற்பனை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Savaran ,Sawaran ,
× RELATED தங்கம் விலையில் மாற்றம் சவரன் ரூ.320 குறைந்தது