×

திண்டுக்கல் மாவட்டத்தில் 16 தாசில்தார்கள் இடமாற்றம்

 

திண்டுக்கல், ஜன. 30: திண்டுக்கல் மாவட்டத்தில் 16 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருவாய்த் துறையில் பணியிடமாற்றம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தாசில்தார்களை பணியிடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, திண்டுக்கல் சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுகந்தி, நத்தம் தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணிபுரிந்த ராமையா திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் வில்சன் தேவதாஸ், திண்டுக்கல் மேற்கு தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணிபுரிந்த செழியன் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பழநி கோட்ட காலல் அலுவலராக பணிபுரிந்த சக்திவேலன் பழநி தாசில்தாராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பழநி தாசில்தாராக பணிபுரிந்த பழனிச்சாமி, பழநி கோட்ட கலால் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமன், திண்டுக்கல் கிழக்கு தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பழநி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சசி, ஒட்டன்சத்திரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டன்சத்திரம் தாசில்தாராக பணிபுரிந்த முத்துச்சாமி, பழநி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏழு தனி தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து திண்டுக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் 16 தாசில்தார்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Dasiltis ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...