காசா:ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் 350 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நிலையில், தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள கான் யூனிஸ் என்ற இடத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350 பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய படைகள் கொன்றதாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘காசாவின் தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்களை மருத்துவக் குழுக்களால் அடையாளம் காண முடியவில்லை. இறந்தவர்களின் உடல்களை கான் யூனிஸ் உள்ள கல்லறைக்கு கொண்டு செல்ல முடியாததால், காசா நகரின் நாசர் மருத்துவமனையின் முற்றத்தில் புதைக்க வேண்டியிருந்தது. கான் யூனிஸ் என்ற இடத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்’ என்று தெரிவித்துள்ளது.
The post ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்: 48 மணி நேரத்தில் 350 பாலஸ்தீனர்கள் பலி appeared first on Dinakaran.