×

கர்நாடகாவில் சோகம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த சுவாமி (55), வர்கீஸ் (68) மற்றும் சேத்தன் (25) ஆகிய மூன்று பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வேணூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து நடந்தது.

மலப்புரத்தைச் சேர்ந்த பஷீர் என்பவர் நடத்தி வந்த பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து நடந்தது. வெடி விபத்து சம்பவத்தின் போது மொத்தம் ஒன்பது பேர் சம்பவ இடத்தில் இருந்தனர். மூன்று பேர் பலியான நிலையில், காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரின் உடல்கள் சுமார் 100 மீட்டர் தொலைவில் சிதறிக் கிடந்தன. பட்டாசு ஆலையின் உரிமையாளரை தேடி வருகிறோம்’ என்றனர்.

The post கர்நாடகாவில் சோகம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Kerala ,Karnataka ,Belthangadi, Dakshina Kannada district ,Swami ,Dinakaran ,
× RELATED பாஜ எம்.பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு