×

ஐஆர்எஸ் பயிற்சி மையத்தில் தீ

திருமலை: ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பாலசமுத்திரத்தில் ஐஆர்எஸ் தேர்வர்களுக்கான பயிற்சி மையம் 503 ஏக்கரில் ரூ.1,500 கோடியில் அமைக்கப்பட்டது. நாட்டில் 2வதாக திறக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தை கடந்த 16ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தேசிய சுங்க மற்றும் நேரடி வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மையம் செயல்பட்டு வந்தது. நேற்று மையத்தில் இருந்து கரும்புகை வெளியேறி திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியே வந்ததால் பாதிப்பு இன்றி தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சி மையம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஐஆர்எஸ் பயிற்சி மையத்தில் தீ appeared first on Dinakaran.

Tags : IRS ,Training ,Center ,Tirumala ,Balasamudra ,Satyasai district ,Andhra Pradesh ,Modi ,Finance Minister ,Fire ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...