- அயோத்தியபட்டினம்
- வீராணம்
- வீமனூர்
- பஞ்சாயத்து கவுன்சில்
- ஜனாதிபதி
- செல்வராணி ஆறுமுகம்
- தி.மு.க.
- விஜயகுமார்
- இரத்தினவேல்
- புதிய ரேஷன் கடை திறப்பு விழா
- தின மலர்
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த வீராணம் அடுத்த வீமனூர் பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி ஆறுமுகம் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு துணை தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், புதிய ரேஷன் கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் செல்வசூர்யா சேதுபதி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோபால், கோரத்துப்பட்டி தலைவர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் கிளை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post புதிய ரேஷன் கடை திறப்பு விழா appeared first on Dinakaran.