×

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

அயோத்தியாப்பட்டணம், ஏப்.27: அயோத்தியாப்பட்டணம் பஸ் ஸ்டாப் அருகே, தெற்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கலந்து கொண்டு, நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் பாபு, துணைத்தலைவர் செல்வ சூர்யா சேதுபதி, அகரம் ராஜேந்திரன், மகேஸ்வரன், ஹரி, அய்யாதுரை, பழனிவேல், மனோசூரியன், காசிலிங்கம், முருகன், நாகராஜ், செல்வரசி பழனிவேல், சுமதி பாலு, பாரதி ஜெயக்குமார், ப்ரீத்திமோகன், தர்மசாஸ்தா, மாசிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nemor Pandal ,DMK ,Ayodhyapatnam ,Southern Union DMK ,Union Secretary ,Vijayakumar ,Neermore ,Pandal ,Eastern ,District ,S.R. Sivalingam ,Dinakaran ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்