×

களக்காடு அருகே வாகனம் மோதி தொழிலாளி காயம்

களக்காடு: களக்காடு அருகே மாவடி, எம்.எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஆறுமுகபெருமாள் மகன் ஜெயக்குமார் (42). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று ஜெயக்குமார் கட்டிட வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். சாலைப்புதூர் இசக்கியம்மன் கோயில் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெயக்குமார் சென்ற பைக் மீது மோதியது. இதில் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.

The post களக்காடு அருகே வாகனம் மோதி தொழிலாளி காயம் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kalakkadu ,Jayakumar ,Arumukaperumal ,Mavadi, MSS ,Ishakiyamman temple ,Salipudhur ,Dinakaran ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...