×

குளச்சல் அருகே 2 படகுகளில் இன்ஜின் திருட்டு

 

நாகர்கோவில், ஜன.29: குமரி மாவட்டம் கடியப்பட்டணம், பெரியவிளை 7 வது அன்பியம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிமுத்து மகன் பெலிங்டன் நாயகன்(29). இவருக்கு சொந்தமான படகு மற்றும் இவரது நண்பர் பெரியவிளை வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான படகிலும் கடந்த 24ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். கரை திரும்பிய அவர்கள் பெரியவிளை கடற்கரையில் படகுகளை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர்.

மறுநாள் (25ம் தேதி) அதிகாலை 4 மணியளவில் மீன்பிடிக்க செல்ல பெரியவிளை கடற்கரைக்கு அவர்கள் சென்றனர். அப்போது இரண்டு படகுகளில் இருந்த இன்ஜின்களையும் காணவில்லை. அவை திருட்டு போயிருந்தது . இது தொடர்பாக பெலிங்டன் நாயகன் குளச்சல் மரைன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டு போன இன்ஜின்கள் மதிப்பு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குளச்சல் அருகே 2 படகுகளில் இன்ஜின் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Nagercoil ,Belington Nayagan ,Anthony Muthu ,Periyavilai 7th Anbiam area ,Kadiyapatnam, Kumari district ,Periyavilai Vincent ,Dinakaran ,
× RELATED சேனம்விளையில் அரசு பஸ்களை சிறை பிடித்த 20 பேர் மீது வழக்கு