×

மதுரை திமுக நிர்வாகி கொலை

மதுரை: மதுரை எம்கே புரத்தை சேர்ந்தவர் திருமுருகன் (35). இவர், 78வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த திருமுருகனை, மர்மநபர்கள் 4 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த திருமுருகனை சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கொலையான திருமுருகனுக்கும், அதே பகுதியிலுள்ள அவரது சித்தப்பாவும், அதிமுக வட்டச் செயலாளருமான தவக்குமாருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. தவக்குமாரின் உறவினர் மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதால் தம்பதியரை பிடித்து விசாரிக்கிறோம்’’ என்றனர்.

The post மதுரை திமுக நிர்வாகி கொலை appeared first on Dinakaran.

Tags : Madurai DMK ,Madurai ,Thirumurugan ,MK Puram, Madurai ,DMK ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை