×

விளையாட்டு வினையானது மது குடித்த கணவரை எச்சரிக்க தீக்குளித்த இளம்பெண் சாவு

விருதுநகர், ஜன. 28: விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியபட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கும் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பை சேர்ந்த சந்தனதேவி(24)க்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இதையடுத்து சின்னப்ப ரெட்டியபட்டியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குமரேசன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்துள்ளார். ஆனால் குமரேசன் மதுப் பழக்கத்தை நிறுத்தவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்றும் குமரேசன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவரை எச்சரிப்பதற்காக, மனைவி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குச்சியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்தனதேவியின் உடலில் நெருப்பு பற்றியது. அவரை காப்பாற்ற முயன்ற குமரேசனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரையும் உறவினர்கள் மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் சந்தனதேவி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆமத்தூர் போலீசில் சந்தனதேவியின் தந்தை முத்தையா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக தீக்குளிப்பது போல் எச்சரிக்கை செய்ய முயன்ற இளம்பண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post விளையாட்டு வினையானது மது குடித்த கணவரை எச்சரிக்க தீக்குளித்த இளம்பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Kumaresan ,Chinnappa Reddiyapatti ,Chandanadevi ,Thiruvilliputhur Chenbagathop ,Chinnappa Rediyapatti ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...