×

இந்நிகழ்வில் கேந்திரிய வித்யாளயா பள்ளி முதல்வர் மேகநாதன், பெரம்பலூர் தாசில்தார் சரவணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூரில் 30ம்தேதி மின்நிறுத்தம்

பெரம்பலூர்: வருகிற 30ம்தேதி பெரம்பலூரில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என்று பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- பெரம்பலூர் 110 கிலோ வாட் துணைமின் நிலையத்தில் வருகிற 30ம்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளான புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூர் சாலை, அரணாரை, அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி சாலை, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, அருமடல், அருமடல் ரோடு, எளம்பலூர் மற்றும் சமத்துவ புரம் ஆகியப் பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் உடனடியாக மின் வினியோகம் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post இந்நிகழ்வில் கேந்திரிய வித்யாளயா பள்ளி முதல்வர் மேகநாதன், பெரம்பலூர் தாசில்தார் சரவணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூரில் 30ம்தேதி மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Gandhiriya Vidyalaya School ,Principal ,Meganathan ,Perambalur ,Dasildar Saravanan ,30TH POWER OUTAGE ,30th Ceasefire ,Dinakaran ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி