×

திருவள்ளூர், திருப்பூர் உள்பட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 11 எஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* திருவள்ளூர் எஸ்.பி. பகிரல செபாஸ் கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார்.

* திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்படுகிறார்.

* மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.

* திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்படுகிறார்.

* சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமிக்கப்படுகிறார்.

* மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.சியாமாலா தேவி நியமனம் செய்யப்படுகிறார்.

* சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.

* சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர், திருப்பூர் உள்பட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tirupur ,Chennai ,Tamil Nadu ,Saminathan ,Tirupur SP ,Bribery SP ,Thiruvallur ,Phairala Sebas Kalyan ,Chennai South Zone Economic Crimes Division ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...