×

கிணற்றில் மூழ்கி சகோதரிகள் பலி

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. டிரைவர். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மகள்கள். ஒரு மகன். இதில், மூத்த மகள் தர்ஷினி (19), கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் வேம்பு (16) பிளஸ் 2 படித்துள்ளார். மகன் லோகேஸ்வரன் (13) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர்களுக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை நடைபெற்றுள்ளது. அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று குழந்தைகளும் சென்றனர். சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தர்ஷனியும், வேம்புவும் அங்கிருந்த 30 அடி ஆழ கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இதில் வேம்பு, தர்ஷினி இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

The post கிணற்றில் மூழ்கி சகோதரிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Musiri ,Palaniswami ,Balapatti village ,Trichy district ,Sasikala ,Darshini ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி