நெல்லை: நாம் தமிழர் கட்சியின் நெல்லை, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், பாளையங்கோட்டையில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சீமான் வெளியிட்டார். நெல்லை தொகுதிக்கு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யாவும், தென்காசி தொகுதிக்கு மயிலை ராஜனையும் வேட்பாளர்களாக அறிவித்தார். இதேபோல், கன்னியாகுமரி தொகுதிக்கு மீனவர் சமுதாயத்தை சேர்ந்த மரிய ஜெனிபர் என்பவரை வேட்பாளராக அறிவித்து உள்ளார்.
The post நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.