×

மறைந்த பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேனி: மறைந்த பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்தார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஏற்கனவே இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த நிலையில், பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தேனி, லோயர் கேம்ப் பகுதியில் பவதாரிணி உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதி சடங்கு நிறைவடைந்த பின்னர் தாய், பாட்டியின் நினைவிடம் அருகே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

The post மறைந்த பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. appeared first on Dinakaran.

Tags : Pavadarini ,Ilayaraja ,Theni ,Ilayaraja Pavadarini ,ILAYARJA ,SRI LANKA ,Koodalur ,Pawatarini ,
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...