×

பவதாரிணியின் உடல் தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது: பிரபலங்கள் நேரில் அஞ்சலி

சென்னை: பவதாரிணி உடல் தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. இளையராஜாவின் மகளும் , பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 47. சுமார் ஆறு மாதங்களாக இலங்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணியளவில் காலமானார். பின்னணிப் பாடகியான பவதாரணி 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலுக்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார். பவதாரிணி இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தில் பவதாரிணி உடல் கொண்டு வரப்பட்டது. விமான நிலைய நடைமுறைகள் முடிந்த பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பவதாரிணியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது மூத்த சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். பவதாரிணியின் உடல் தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து பவதாரிணியின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலை நாளை சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

The post பவதாரிணியின் உடல் தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது: பிரபலங்கள் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Pavadarini ,Ilayaraja ,Thiagarayanagar ,Chennai ,Pawadarini ,SRI LANKA ,
× RELATED சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு...