×

சமுதாயக்கூடம் கட்டுமான பணி

 

போச்சம்பள்ளி, ஜன.26: சந்தூர் மாங்கனி முருகன் கோயில் அடிவாரத்தில், ₹9.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் வட்டார துணை தலைவர் ஆனந்த், செயலாளர் வசந்தகுமார், முன்னாள் தலைவர் சக்ரவர்த்தி, திமுக மாவட்ட துணை அமைப்பாளர் காமராஜ், கவுன்சிலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். இதில் செல்லகுமார் எம்பி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் கோகுல் ஆசிரியர், மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரை, வட்டார தலைவர் ரவி, அமைப்புச்சார தலைவர் சிவலிங்கம், மாவட்ட துணை அமைப்பாளர் தெய்வம், முனுசாமி, டெல்லிமோகன், ராஜா, சென்னகேசவன், ஏழுமலை, சுப்பிரமணி, கண்ணன், ராமு, கந்தசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் கஜேந்திரன் நன்றி கூறினார்.

The post சமுதாயக்கூடம் கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Bhoomi Puja ,Santur Mangani Murugan Temple ,Panchayat ,Council ,Ranganathan ,Congress district ,vice president ,Anand ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...