மதுரை, ஜன.26: மதுரை அஞ்சல் துறையில் குழந்தைகள், முதியோர், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் பெண்கள் மேன்மை சேமிப்பு பத்திரம் திட்டம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள் மதுரையில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் நடைபெற்றது. இதில் மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் ஆலங்குளம் அங்கன்வாடியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன், முதுநிலை அஞ்சல் தலைவர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளின் நலன் கருதி சேமிப்பு திட்டங்களை துவங்கினர். இதில் 24 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம் புதிதாக துவங்கப்பட்டது.
The post அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் இணைந்த குழந்தைகள் appeared first on Dinakaran.