×

போலி பத்திரம்.. 20 கோடி நில மோசடி : சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவிநீக்கம் செய்ய உத்தரவு!!

திருவாரூர்: சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவிநீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளனர்.இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா, அதிமுகவைச் சேர்ந்த மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் னோகரன் உள்ளிட்டோர் தான் ஈடுபட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2017-ம் ஆண்டு மாவட்டக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு எதிரான நில மோசடி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமுதா தலைமறைவாகி இருப்பதாக சிபிசிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து அமுதாவை கைது செய்யும் நடவடிக்கை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 12ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவிநீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க திருவாரூர் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post போலி பத்திரம்.. 20 கோடி நில மோசடி : சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவிநீக்கம் செய்ய உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Cherankulam ,panchayat ,Amuda ,Tiruvarur ,Cherankulam panchayat council ,president ,R.Roslin ,Mannargudi Karthanathapuram ,Tiruvarur District ,Chennai High Court ,Gnanambal ,
× RELATED கிட்டாம்பாளையம் ஊராட்சி குளத்தில்...