×

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் தீ விபத்தில் உயிரிழப்பு

வேலூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியைச் சேர்ந்தவர் கே.பி.அன்பழகன். அதிமுக முன்னாள் அமைச்சரான இவர் தற்போது தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளராகவும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு டாக்டர் சந்திரமோகன், சசிமோகன் ஆகிய மகன்களும், வித்யா என்ற மகளும் உள்ளனர் 2வது மகன் சசிமோகனின் மனைவி பூர்ணிமா (30).

கே.பி.அன்பழகனுடன் அவரின் 2 மகன்களும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பூர்ணிமா வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பூஜை அறையில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கில் இருந்து பூர்ணிமாவின் நைட்டியில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பற்றி எரிந்ததில் அதிர்ச்சி அடைந்த பூர்ணிமா கூச்சல் போட்ட நிலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு பூர்ணிமா கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பூர்ணிமா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூர்ணிமாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் தர்மபுரி ஆர்டிஓ கீதாராணி விசாரணை நடத்தி வருகிறார். மாஜி அமைச்சரின் மருமகள் தீவிபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் தீ விபத்தில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,K. B. ,Vellore ,minister ,K. ,Kerakodalli ,Dharmapuri district ,Karimangalam ,Minister of State ,Palakoda ,former ,K. B. Anbhaghan ,Dinakaran ,
× RELATED இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில்...