×

குடியரசு தின விழாவை முன்னிட்டு நாளை சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு நாளை சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் ஏற்றி வைக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்; 75-வது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாளை (26.1.2024) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ. ராஜசேகரன், ஜெ. டில்லிபாபு, எம்.பி. ரஞ்சன்குமார், எம்.ஏ. முத்தழகன், அடையாறு த. துரை ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்நிகழ்வுகளில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் – இந்நாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

The post குடியரசு தின விழாவை முன்னிட்டு நாளை சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார் பீட்டர் அல்போன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Peter Alphonse ,Sathyamurthy Bhavan ,Republic Day ,Chennai ,Tamil Nadu ,Minority ,Commission ,Ch. Peter Alphonse ,Tamil Nadu Congress Committee ,75th ,Republic Day of India ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...