×

திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம்: கனிமொழி எம்.பி. பேட்டி

நாகர்கோவில்: பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கனிமொழி எம்.பி. கூறினார்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : சென்னையில் திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவல்துறை குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமாக தேடி வருகிறது. இதுபோன்று மோசமாக ஒரு இளம் பெண்ணை நடத்திய நபர்கள் யாரையும் விட்டு விட முடியாது. யார் தவறு செய்தாலும் கைது செய்து விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதிமுக போராட்டம் அறிவித்துள்ளார்கள். அதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கைது செய்த பிறகு நாங்கள் போராட்டம் அறிவித்ததால் கைது நடந்துள்ளது என கூறுவார்கள்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் யாருக்கும் 100 நாள் வேலை திட்டத்தை கொடுக்க முடியாத நிலையில் ஒன்றிய அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு ₹367 கோடி நிலுவை தொகை பாக்கி இருப்பதாக பதில் அளித்துள்ளார்கள். இது சம்பந்தமாக அண்ணாமலை பொய் சொல்லலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஒன்றிய அரசு தவறாக சொல்லியிருக்கலாம். எதை வேண்டுமானாலும் புனைந்து பேசினால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

தூத்துக்குடியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக பெண்களுக்கு அதிகபடியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம்: கனிமொழி எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kanilanghi M. B. ,Nagarko ,Kanyla ,Dimuka ,Deputy Secretary General ,Kanimozhi M. B. ,Kumari ,Nagarkov ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!