×

செண்டங்காடு ஊராட்சியில் அண்ணா கலையரங்கம் திறப்பு விழா எம்.எல்.ஏ அண்ணாதுரை பங்கேற்பு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செண்டங்காடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் ரூ 9.40 லட்சம் மதிப்பில் ராமர் கோயில் அருகில் அண்ணா கலையரங்கம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. செண்டங்காடு ஊராட்சி தலைவர் கோவிந்தராசு தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயலெட்சுமி சாம்பசிவம் முன்னிலை வகித்தனர். புதிய அண்ணா கலையரங்கத்தை பட்டுக்கோட்டைஎம்.எல்.ஏ. அண்ணாதுரை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், பட்டுக்கோட்டை ஒன்றிய பிடிஓவினர் சாமிநாதன், கோவிந்தராசன், முன்னாள் ஊராட்சி தலைவர் கலியமூர்த்தி, ஊராட்சி வார்டு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செண்டங்காடு ஊராட்சியில் அண்ணா கலையரங்கம் திறப்பு விழா எம்.எல்.ஏ அண்ணாதுரை பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,Annadurai ,Anna Kalaiyarangam ,Sendangad Panchayat ,Pattukottai ,Pattukottai Panchayat Union ,Rural Development Department ,Panchayat Department ,Ram Temple ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...