×

ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி புதிய மனு தாக்கல்..!!

சென்னை: கோடநாடு விவகாரத்தில் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேத்யூ சாமுவேல் மனுவில் உள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி புதிய மனு தாக்கல் செய்தார். பதில் மனுவில் மேத்யூ சாமுவேல் தவறான கருத்துகளை கூறியிருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனு குறித்து மேத்யூ சாமுவேல் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி.23க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி புதிய மனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,CHENNAI ,Mathew Samuel ,Kodanadu ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்