×

குமரி பஸ் ஊழியர் கொலை 2 நிர்வாகிகள் கைது பங்கு தந்தை நீக்கம்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர்குமார் (45). கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 20ம் தேதி (சனி) தனது மனைவி ஜெமினியை மைலோடு தேவாலயத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்தது தொடர்பாக பங்கு தந்தை அலுவலகத்துக்கு பேச்சு வார்த்தைக்கு சென்றார். அங்கு தகராறில் சேவியர் குமார் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பங்கு பேரவை துணை தலைவர் ஜெஸ்டஸ் ரோக், பங்கு பேரவை நிர்வாகி வின்சென்ட் ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மேலும், ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பங்கு தந்தை ராபின்சன் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், பங்கு தந்தை பொறுப்பில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி சேவியர்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

The post குமரி பஸ் ஊழியர் கொலை 2 நிர்வாகிகள் கைது பங்கு தந்தை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Xavierkumar ,Mylodu Matathuvilai ,Dingalchandi ,Kumari district ,Kanyakumari Government Transport Corporation ,Gemini ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்