×

தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் குழு சென்னையில் பொதுமக்களுடன் நாளை கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இக்குழுவின்மக்களுடனான கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வருவதற்கான வாக்குறுதிகள் மற்றும் பரிந்துரைகளை தெளிவாக வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான ஆவணம். 2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் அமைத்திருக்கிறது. குழுவின் தலைவராக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரமும், அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கருத்துகளை கேட்கிற ஆலோசனைக் கூட்டம்நாளை மாலை 3.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கின் கீழ் தளத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் அறிக்கையில் இடம்பெறத் தக்க ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறுவதோடு, அதை எழுத்து வடிவத்திலும் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வில் பங்குபெற்று கருத்துகளை கூறுவதற்கு பல்வேறு துறைகளில் செயல்படும் அமைப்பு சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். மாலை 6 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த கருத்துகளின் அடிப்படையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற அடித்தளமாக அமையும்.

The post தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் குழு சென்னையில் பொதுமக்களுடன் நாளை கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : P. ,Chidambaram ,Chennai ,K.S.Azhagiri ,Congress ,P. Chidambaram ,KS Azlagiri ,Tamil Nadu Congress ,President ,KS Azhagiri ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...