×

மதுரையில் கண்மாய் வழியாக மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கில் நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை ஏற்படுகிறது: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய், தென்கால் கண்மாய் வழியாக மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கில் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை ஏற்படுவதாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி தண்டபாணி அதிருப்தி தெரிவித்துள்ளார். மதுரை அண்ணா பேருந்து நிலையம் – கோமதிபுரம் வரை ரூ.150.28 கோடியில் மேம்பாலம் கட்ட தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மதுரை புதிய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வண்டியூர் கண்மாய் 575 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக கண்மாய் 400 ஏக்கராக சுருங்கிவிட்டது.இந்த கண்மாய்க்கு 3 ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன. கே.கே.நகர், மேலமடை, கோமதிபுரம், பாண்டிகோவில், கருப்பாயூரணி, யாகப்பாநகர், மாட்டுத்தாவணி, லேக்வியூ மற்றும் வண்டியூர் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் வண்டியூர் கண்மாயை சார்ந்துள்ளது.

அண்மையில் வண்டியூர் கண்மாயை பராமரிக்க மாநகராட்சி ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது. இந்நிலையில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோமதிபுரம் பெட்ரோல் நிலையம் வரை 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது. தென்கால் கண்மாயில் விளாச்சேரி மெயின் ரோட்டில் இருந்து மதுரை – திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது. எனவே வண்டியூர், தென்கால் கண்மாயில் மேம்பாலம் கட்ட தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

மதுரை கடந்த 50 ஆண்டுகளில் ஏராளமான நீர் நிலைகளை இழந்துள்ளது. அவனியாபுரம் இருப்பது நீர் நிலையில் தான். அங்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா, மாவட்ட நீதிமன்றம், பல்வேறு அரசு கட்டிடங்கள் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளது. இயற்கை மீண்டும் மீண்டும் பாடங்களை கற்றுக்கொடுத்த போதும் இன்னும் பாடம் கற்பிக்கவில்லை. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். சாலை அமைப்பதற்காக வண்டியூர் கண்மாய் போதுமான அளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வண்டியூர், தென்கால் கண்மாய்களில் மேம்பாலம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.

நீர்நிலைக்குள் மண்ணை கொட்டி கட்டுமான பணி மேற்கொண்டால் திட்டமதிப்பீடு குறையும் என்றார் ஒப்பந்ததாரர். ஒப்பந்ததாரர் என்னிடம் கூறிய வார்த்தை அதிர்ச்சி அளிக்கிறது. கண்மாயை பாதிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள முடியுமா? கண்மாயை பாதிக்காதவாறு மேம்பாலம் கட்டப்படும் என அறிக்கை தாக்கல் செய்தால் நீதிமன்றம் பரிசீலிக்கும். கண்மாயை பாதிக்கும் வகையில் மேம்பாலப் பணிகளை மேற்கொண்டால் அனுமதி வழங்க இயலாது. கண்மாயை பாதிக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க நான் விரும்பவில்லை என்று நீதிபதி தண்டபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

 

The post மதுரையில் கண்மாய் வழியாக மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கில் நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை ஏற்படுகிறது: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Madura ,Aycourt Madurai ,Madurai ,Vandiyur Kanmai ,Tenkal Kanmai ,Icourt Madurai Branch ,Judge ,Dandapani ,Anna ,Aycourt Madurai Branch ,
× RELATED மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற...