×

உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தும் முதலீடுகள் தொடருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தும் முதலீடுகள் தொடருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் Gorilla Glassகளை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த Corning International Corporation மற்றும் இந்தியாவைச் சேர்ந்த Optiemus Infracom Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான Bharat Innovative Glass Technologies Private Limited BIG TECH மற்றும் Guidance இடையே காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தும் முதலீடுகள் தொடருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,World Investors Conference ,K. Stalin ,Chennai ,MLA ,United States ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...