×

தைத் திருநாள் கவியரங்கம்

மதுரை, ஜன.23: தைப் பொங்கலை முன்னிட்டு தைத்திருநாள் கவியரங்கம் நடந்தது. மதுரை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம், நியூ செஞ்சுரி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் தைத் திருநாள் கவியரங்கம் நடந்தது. கலைஇலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் செல்லா தலைமை வகித்தார். நியூசெஞ்சுரி மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் கவிஞர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பேராசிரியர் ஆனந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் பேனா மனோகரன் தலைமையில் நடந்த கவியரங்கில், கவிஞர்கள் சோழவந்தானூர் முத்தையாப்புலவர் உழைப்பின் மறுபக்கம் என்ற தலைப்பிலும், தமிழ்சிவா ஒரு துளி நிலம், தமிழரசன் வயலும் வரப்பும், ஆண்டிபாண்டி நீரின் நிறம், ரோசா முத்தையன் களையும், பயிறும், மதுரை நல்லீசன் நெல்லின் ஓசை என்ற தலைப்பிலும் கவி பாடினர். கவிஞர் அழகுபாரதி மண்ணின் பாடல்களை பாடினார். மேலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

The post தைத் திருநாள் கவியரங்கம் appeared first on Dinakaran.

Tags : Thai Thirunal Poetry Hall ,Madurai ,Thai Pongal ,Thai Thirunal Kaviarangam ,Madurai District Art and Literary Forum ,New Century Institute ,Kavinjar Sella ,District President of ,Arts and Literature Council ,Thai Thirunal Kavyarangam ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை