×

பணம் திருடிய பெண் கைது

மேலூர், ஜன.23: மேலூர் அருகே உறங்கான்பட்டியை சேர்ந்த கருப்பையா மனைவி கவிதா(44). இவர் நேற்று மாலை வெள்ளலூர் விலக்கிலிருந்து மேலூர் வருவதற்காக வாகனத்தில் ஏறி வரும் போது உடன் அமர்ந்து இருந்த பெண் ஒருவர் கவிதா வைத்திருந்த பையில் இருந்த மணி பர்ஸ் எடுத்து கொண்டு கீழே இறங்கி உள்ளார். இதை கவனித்த கவிதா கூச்சலிட திருடிய அந்த பெண்னை பொதுமக்கள் பிடித்து மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் சக்குனம்பட்டியை சேர்ந்த சுரேஷ் மனைவி லட்சுமி(30) என்று தெரிய வந்தது. மேலூர் போலீசார், லட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பணம் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Melur ,Kavitha ,Uranganpatti ,Vellalur ,Mellur ,Kavita ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!