ஜோலார்பேட்டை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. பின்னர் ரயில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை 1வது யார்டில் நிறுத்தப்பட்டது. அப்போது ரயில் இன்ஜினில் இருந்து 21வது பெட்டியின் மேல் பரப்பில் திடீரென புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் ஏற்படும் அதிர்வுகளால் நிலக்கரிகள் ஒன்றோடு உராய்வு ஏற்படுதல் மற்றும் பகல் நேரங்களில் நிலவும் அதிகளவு வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் திடீர் தீ appeared first on Dinakaran.