×

தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது: இயக்குநர் பா.ரஞ்சித்

சென்னை: தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப் போகிறோம் என்ற பயம் நமக்கு வருகிறது. இத்தகைய சூழலில் நமது மனங்களை பண்படுத்தவும், மூளையில் ஏற்றி வைத்துள்ள பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அழிப்பதற்கும் நம்மிடம் இருக்கும் ‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம். மக்களை எளிதில் அடையும் ஆயுதமாக ‘கலை’ இருப்பதால், மக்கள் மனங்களை சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது: இயக்குநர் பா.ரஞ்சித் appeared first on Dinakaran.

Tags : India ,B. Ranjith ,Chennai ,Ba Ranjith ,Pa. Ranjith ,
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி