×

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு இல்லை

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்திலாபாலாஜி மீது குற்றசாட்டு பதிவு இல்லை தெரிவித்துள்ளனர். பிரதான பண மோசடி வழக்கில் முடிவுக்கும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென மனு அளித்துள்ளார். செந்திலாபாலாஜி தரப்பின் புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. புதிய மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றசாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வரும் 22ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததையடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 15வது முறையாக ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தனக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னை கைது செய்யும் நோக்கில் ஆவணங்களில் அமலாக்க துறை திருத்தம் செய்துள்ளது. ஆவணங்களை முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது என்று கூறப்பட்டிருந்தது.

இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்திலாபாலாஜி மீது குற்றசாட்டு பதிவு இல்லை என்று தெரிவித்துள்ளார். செந்திலாபாலாஜி தரப்பின் புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. புதிய மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றசாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

 

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு இல்லை appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,CHENNAI ,Enforcement Department ,Senthilbalaji ,Minister ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...