×

அரவக்குறிச்சியில் சாக்கு மூட்டைகள் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில் உபயோகப்படுத்தப்பட்ட பழைய சாக்கு மூட்டைகளை அடுக்கி கொண்டுவரப்பட்ட லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு உபயோகப்படுத்தப்பட்ட சாக்குகளை சுருட்டி மூட்டைகளாக ஒரு லாரியில் கொண்டுவரப்பட்டது. கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகே உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அப்போது லாரி டிரைவர் உடனே லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் சாக்கு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின. லாரி பாதியளவு சேதமானதாக கூறப்படுகிறது. அரவக்குறிச்சி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரவக்குறிச்சியில் சாக்கு மூட்டைகள் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Dindigul ,Karur ,Karur district ,Malaikovilur ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...