×

அரசு மருத்துவமனை அருகே சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

வேடசந்தூர், ஜன. 22: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மருத்துவமனையை தரம் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று ஏராளமான கோரிக்கைகளை பொதுமக்கள் முன்னிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை செல்லும் நுழைவாயில் அருகே ராட்சத சாக்கடை கால்வாய் செல்கிறது.

தற்போது கால்வாயில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குட்டை போல் மருத்துவமனை நுழைவாயில் அருகே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே சிகிச்சை பெரும் பயனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குட்டை போல் தேங்கி உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post அரசு மருத்துவமனை அருகே சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Vedasandur, Dindigul district ,Dinakaran ,
× RELATED அய்யலூரில் சாலையில் கிடக்கும்...