×

பெரியபாளையம் அருகே பழுதடைந்த அங்கன்வாடி மையம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, ஜன. 22: பெரியபாளையம் அருகே செங்கரை கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் பழைய அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில், அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து, மேல் தளம் சேதமடைந்து, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு அச்சப்பட்டனர். இதனால் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள மகளிர் சுயஉதவி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். மேலும் அங்கன்வாடி மைய கட்ட வேண்டும் என வலியுறுத்தி கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, பழுடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே பழுதடைந்த அங்கன்வாடி மையம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Center ,Periyapalayam ,Uthukottai ,Anganwadi center ,Chengarai village ,Ellapuram Union ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்