×

நியூசிலாந்துடன் 5வது டி20 பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 5வது டி20 போட்டியில், பாகிஸ்தான் 42 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன் குவித்தது. ரிஸ்வான் 38, பகார் ஸமான் 33, சாஹிப்ஸதா பர்ஹான் 19, அப்பாஸ் அப்ரிடி 15*, பாபர் 13 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ, ஹென்றி, பெர்குசன், சோதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 17.2 ஓவரில் 92 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பிலிப்ஸ் 26, ஃபின் ஆலன் 22, செய்பெர்ட் 19, வில் யங்12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினர். பாக். பந்துவீச்சில் இப்திகார் 3, ஷாகீன், நவாஸ் தலா 2, ஸமான் கான், உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பாக். ஆறுதல் வெற்றியை வசப்படுத்த, நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இப்திகார் ஆட்ட நாயகன் விருதும், ஃபின் ஆலன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post நியூசிலாந்துடன் 5வது டி20 பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி appeared first on Dinakaran.

Tags : 5th T20 ,Pakistan ,New Zealand ,Christchurch ,5th T20I ,Hackley Oval ,
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து