×

இளைஞரணியின் முயற்சியே மாநாட்டின் வெற்றிக்கு காரணம்: அமைச்சர் கே.என்.நேரு

மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு பேசியதாவது: தலைவரோடும், தளபதியோடும் நீண்ட காலம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மாநாட்டின் மூலம் உதயநிதியோடும் நீண்ட நாட்கள் பணியாற்றும் வாய்ப்பை பெற்றேன். 2, 3முறை தேதி மாற்றம் நடந்தது. ஆனாலும் மாநாட்டின் மாபெரும் வெற்றிக்கு, இளைஞர் அணியின் முயற்சியே பிரதான காரணம். மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், சிவலிங்கம், செல்வகணபதி மட்டுமின்றி, இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் இதற்கு ஒரு காரணம். உணவு வழங்கியவர்கள், எல்இடி அமைத்தவர்கள், பந்தல் அமைத்தவர்கள், நுழைவுவாயில் அமைக்க நிலம் வழங்கியவர்கள் என்று அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் மூலம், நிச்சயம் தலைவர் அவர்களும், உதயநிதி அவர்களும் இட்ட பணியை தொடர்ந்து செய்வேன் என்று உறுதியளித்து, நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

The post இளைஞரணியின் முயற்சியே மாநாட்டின் வெற்றிக்கு காரணம்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Minister KN Nehru ,Coordinator ,Administration ,Minister ,K.N. Nehru ,Udhayanidhi ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு...