×

ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்

ஈரோடு, ஜன. 21:ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கோமதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் சங்கீதா ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

The post ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார் appeared first on Dinakaran.

Tags : Erode District Crime Branch ,Erode ,Gomathi ,All Women Police Station ,Tirupur District ,Kangeyam ,Sangeetha ,Erode District Crime Branch Police ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...