×

கோவையில் தங்கிய நைஜீரிய வாலிபர் மீது வழக்கு

கோவை, ஜன.21: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு அவினாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நைஜீரிய வாலிபர் ஒருவர் சிகிச்சைக்கு சேர்ந்திருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நைஜீரிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது பெயர் இம்மானுவேல் (38) என்பது தெரிய வந்தது. இவர் மும்பையில் தங்கி இருந்து பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். வேலை விஷயமாக திருப்பூருக்கு வந்த போது திடீரென படப்படப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்ந்தது தெரியவந்தது. அவரது பாஸ்போர்ட் மட்டும் விசா ஆகியவற்றை போலீசார் வாங்கி சோதனை செய்தனர். அப்போது, அவரது விசா காலாவதியானது தெரியவந்தது. வாலிபர் சட்ட விரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சட்ட விரோதமாக தங்கி இருந்த நைஜீரிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவையில் தங்கிய நைஜீரிய வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Racecourse Police ,Avinasi Road ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...